Thiruppugazh Thamaraiyin mattu

முருகா!
உனது திருவருட்கருணையை என்றும் மறவேன். 


தாமரையின் மட்டு வாசமல ரொத்த 
தாளிணை நினைப்பி ...... லடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி ...... யவிராலி

மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவென அழைத்தென் ...... மனதாசை

மாசினை யறுத்து ஞானமு தளித்த
வாரமினி நித்த ...... மறவேனே

காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க ...... நதிவேணி

கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் ...... குருநாதா

சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று ...... வயலூரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

தாமரையின் மட்டு வாசமலர் ஒத்த
தாள்இணை நினைப்புஇல், ...... அடியேனை,

தாதுஅவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப
தாரு என மெத்திய ...... விராலி

மாமலையின் நிற்ப, நீ கருதி உற்று,
வா என அழைத்து, என் ...... மனதுஆசை,

மாசினை அறுத்து, ஞான அமுது அளித்த
வாரம் இனி நித்தம் ...... மறவேனே.

காமனை எரித்த தீ நயன நெற்றி,
காதிய சுவர்க்க ...... நதி வேணி,

கானில் உறை புற்றில் ஆடுபணி இட்ட
காதுஉடைய அப்பர் ...... குருநாதா!

சோமனொடு அருக்கன் மீன் உலவு மிக்க
சோலைபுடை சுற்று ...... வயலூரா!

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
சூர்தலை துணித்த ...... பெருமாளே.

Comments