Thiruppugazh vEzham unda

முருகா!
ஆனை நோய் கண்ட விளாம்பழம் போல நொந்து வாடாமல் அருள் புரிவாய்.


வேழ முண்ட விளாகனி ...... யதுபோல 
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி

நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே

மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா

காள கண்ட னுமாபதி ...... தருபாலா
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

வேழம் உண்ட விளாகனி ...... அது போல
மேனி கொண்டு, வியாபக ...... மயல்ஊறி,

நாளும் மிண்டர்கள் போல்மிக ...... அயர்வு ஆகி,
நானும் நைந்து விடாது, அருள் ...... புரிவாயே,

மாள அன்றுஅமண் நீசர்கள் ...... கழு ஏற,
வாதில் வென்ற சிகாமணி! ...... மயில்வீரா!

காள கண்டன் உமாபதி ...... தருபாலா!
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே!

Comments