Thiruppugazh paattil urugilai

பாட்டில் உருகிலை (தீர்த்தமலை)

ஏ மனமே!
அடியார்க்கு எளியனாகிய முருகனை அடைவாய்


பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம்

பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது, நல் ...... வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ......னிதுகேளாய்

வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு மெளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா!

தீர்த்த எனதகம் ஏட்டையுட னினை
ஏத்த அருளுட னோக்கி அருளுதி
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

பாட்டில் உருகிலை, கேட்டும் உருகிலை,
கூற்று வருவழி பார்த்தும் உருகிலை,
பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை, ...... தினமானம்

பாப்பு அணியன் அருள் வீட்டை விழைகிலை,
நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை,
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது, நல் ...... வழிபோக,

மாட்டம் எனுகிறை, கூட்டை விடுகிலை,
ஏட்டின் விதிவழி ஓட்டம் அறிகிலை,
பார்த்தும் இனிஒரு வார்த்தை அறைகுவன் ......இது கேளாய்.

வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன்,
ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை,
வாழ்த்த இருவினை நீக்கும் முருகனை ....மருவாயோ?

ஆட்டி வடவரை வாட்டி அரவொடு
பூட்டி, திரிபுரம் மூட்டி, மறலியின்
ஆட்டம் அற சரண் நீட்டி, மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி, மகம் அதை வீட்டி, ஒருவனை
அட்டின் முகமதை நாட்டி, மறைமக
ளார்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் ......அருள்பாலா!

சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற
ஓட்டி, அழல்பசை காட்டி, சமணரை
சீற்றமொடு கழு ஏற்ற அருளிய ...... குருநாதா!

தீர்த்த! எனது அகம் ஏட்டை உடன் நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி,
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.

Comments