பத்தர் கணப்ரிய (திருச்செங்கோடு)
முருகா!
நால்திசையில் உள்ளோர் வியக்கும் திருப்புகழைப் பாட அருள் புரிந்ததை மறவேன்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
பட்சி நடத்திய ...... குக! பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள
பத்தர்கள் அற்புதம் ...... எனஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த,
திருப்புகழைச் சிறிது ...... அடியேனும்
செப்ப என வைத்து, உலகிற் பரவ, தெரி-
சித்த அநுக்ரகம் ...... மறவேனே.
கத்திய தத்தை களைத்து விழத் திரி
கல்கவண் இட்டு எறி ...... தினைகாவல்
கற்ற குறத்தி, நிறத்த கழுத்து அடி
கட்டி அணைத்த ...... பனிருதோளா!
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த,
தகப்பனும் மெச்சிட, ...... மறைநூலின்
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய
சர்ப்ப கிரிச் சுரர் ...... பெருமாளே.
முருகா!
நால்திசையில் உள்ளோர் வியக்கும் திருப்புகழைப் பாட அருள் புரிந்ததை மறவேன்.
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பத்தர் கண ப்ரிய! நிர்த்தம் நடித்திடுபட்சி நடத்திய ...... குக! பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள
பத்தர்கள் அற்புதம் ...... எனஓதும்
சித்ர கவித்துவ சத்த மிகுத்த,
திருப்புகழைச் சிறிது ...... அடியேனும்
செப்ப என வைத்து, உலகிற் பரவ, தெரி-
சித்த அநுக்ரகம் ...... மறவேனே.
கத்திய தத்தை களைத்து விழத் திரி
கல்கவண் இட்டு எறி ...... தினைகாவல்
கற்ற குறத்தி, நிறத்த கழுத்து அடி
கட்டி அணைத்த ...... பனிருதோளா!
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த,
தகப்பனும் மெச்சிட, ...... மறைநூலின்
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய
சர்ப்ப கிரிச் சுரர் ...... பெருமாளே.
Comments
Post a Comment