Thiruppugazh #178 allil nerum min

அல்லில் நேரும் (வள்ளியூர்)
முருகா! மாயையில் உழலாமல் ஆண்டு அருள்


அல்லில் நேருமி ...... னதுதானும்
அல்ல தாகிய ...... உடல்மாயை
கல்லி னேரஅ ...... வழிதோறுங்
கையு நானுமு ...... லையலாமோ

சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய வூர்கெட ...... விடும்வேலா
வல்லி மாரிரு ...... புறமாக
வள்ளி யூருறை ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


அல்லில் நேருமின் ...... அதுதானும்
அல்லது ஆகிய ...... உடல்மாயை
கல்லில் நேர அ ...... வழிதோறும்
கையும் நானும் ...... உலையல் ஆமோ?

சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய, ஊர்கெட, ...... விடும்வேலா!
வல்லி மார் இரு ...... புறமாக
வள்ளி யூர் உறை ...... பெருமாளே.

Comments