Thiruppugazh #177 thaththi thaththi

தத்தித் தத்தி (காஞ்சீபுரம்)

முருகா!
உன் மீது காதல் கொண்ட இந்தப் பெண்ணுக்கு
உனது வெட்சிமலர் மாலையைத் தந்து அருள்


தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் ...... கடலாலே

சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் ...... பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் ...... றழியாதே

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் ...... தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா

கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் ...... கினியோனே

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் ...... திடும்வீரா

சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

தத்தித் தத்தி, சட்டப் பட்டு,
சத்தப் படு மைக் ...... கடலாலே,

சர்ப்பத் தத்தில் பட்டு, கெட்டு,
தட்டுப் படும் அப் ...... பிறையாலே,

சித்தத்துக்குப் பித்து உற்று உச்ச,
சித்ரக் கொடி உற்று ...... அழியாதே,

செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் ...... தரவேணும்.

கொத்துத் திக்குப் பத்து உள் புக்கு,
குத்தி, கிரியைப் ...... பொரும்வேலா!

கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக்
கொச்சைக் குறவிக்கு ...... இனியோனே!

சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்தத்
துக்கத்தை ஒழித் ...... திடும் வீரா!

சொர்க்கத்துக்கு ஒப்புற்ற, கச்சிச்
சொக்கப் பதியில் ...... பெருமாளே.

Comments