Thiruppugazh #173 irul kaattu

தில்லை முருகா!
வினையால் அடியேன் நலிதல் ஆமோ? 


இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண

இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர்

மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை ...... நடவாத

வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ

தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே

தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு ...... மணிமார்பா

அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா

அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே

பதம் பிரித்தல்



இருள்காட்டு செவ்வி ததி காட்டி, வில்லின்
நுதல் காட்டி வெல்லும் ...... இருபாண

இயல் காட்டு, கொல் குவளை காட்டி, முல்லை
நகை காட்டு வல்லி ...... இடைமாதர்

மருள் காட்டி, நல்குரவு காட்டும் இல்ல
இடுகாட்டின் எல்லை ...... நடவாத

வழி காட்டி, நல் அறிவு காட்டி, மெல்ல
வினை வாட்டி அல்லல் ...... செயல்ஆமோ?

தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல்
மொழி காட்டு தில்லை ...... இளையோனே!

தினை காட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு ...... மணிமார்பா!

அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ!
அடல் காட்டு வல் ...... அசுரர் கோபா!

அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

Comments