Thiruppugazh #170 pagal iravinil

பகலிரவினில் (சென்னிமலை)

முருகா!
உண்மைப் பொருளை உபதேசித்து,
அநுபூதி இனிமையில் திளைக்கும் அருளைப் புரிவாய்
.



பகலிரவினிற் ...... றடுமாறா
பதிகுருவெனத் ...... தெளிபோத

ரகசியமுரைத் ...... தநுபூதி
ரதநிலைதனைத் ...... தருவாயே

இகபரமதற் ...... கிறையோனே
இயலிசையின்முத் ...... தமிழோனே

சகசிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே.

Comments