Thiruppugazh #169 pulaiyanaana

pulaiyanAna (thiruvaruNai)
புலையனான (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னையே எப்போதும் நினைக்குமாறு
எனது உள்ளத்தில் பொருந்தி இருந்து அருள்


புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன் 
பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன்

புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி ...... குலபாதன்

நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி ...... யொருசீதை

சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் ...... மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை ...... மயிலேறி

அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.

Comments