Thiruppugazh #167 kayal vizhiththaen

கயல் விழித்தேன் (திருவருணை
திருவருணை முருகா!
காலன் எனை அணுகாமல் காத்து அருள். 



கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்
கணவகெட் டேனெனப் ...... பெறுமாது

கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்
கதறிடப் பாடையிற் ...... றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்
பறைகள்கொட் டாவரச் ...... சமனாரும்

பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்
பரிகரித் தாவியைத் ...... தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்
றருணையிற் கோபுரத் ...... துறைவோனே

அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்
தரியசொற் பாவலர்க் ...... கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்
புனமறப் பாவையைப் ...... புணர்வோனே

பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்
பொருமுழுச் சேவகப் ...... பெருமாளே.

Comments