Thiruppugazh #164 ettile varai

ஏட்டிலே வரை
(பொதுப்பாடல்கள்)

முருகா!
இந்த உடம்பு இறந்து
படுவது என்பது நீங்காதோ?



ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினி ...... தென்றுதேடி

ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகு ...... லங்கள்பேசிக்

காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉல ...... கங்களேசக்

காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ

கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிப ...... மங்கைகோவே

கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
வேற்சி காவள ...... கொங்கில்வேளே

பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குற ...... மங்கைபாகா

பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள் ...... தம்பிரானே.

Comments