Thiruppugazh #158 thollai-mudhal

தொல்லைமுதல் (கொல்லிமலை)
முருகா!
உண்மை அறிவு ஆனந்தப் பொருளை அடையும் பொருளை அருள்.


தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி

துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப்

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று ...... குழலூதுங்

கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே.

Comments