Thiruppugazh #156 maruvum anju

முருகா!
உடல் பற்று நீங்கி, 
அத்துவிதப் பெருவாழ்வு பெற அருள்புரிவீர்.


மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட ...... அறியாது

மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத ...... அடியேனும்

உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேச ......அறியாத

உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாத ...... மருள்வாயே

அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி ...... கடையூடே

அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி ...... குருநாதா

திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலை ...... விடுவோனே

செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது,
     மலம் இது என்று போட ...... அறியாது,

மயல்கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும்
     வகையில் வந்து இராத ...... அடியேனும்,

உருகி அன்பினோடு உனை நினைந்து, நாளும்
     உலகம் என்று பேச ......அறியாத,

உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர,
     உபய துங்க பாதம் ...... அருள்வாயே.

அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
     அடி பணிந்து பேசி, ...... கடை ஊடே

அருளுக என்ற போது, பொருள் இது என்று காண
     அருளும் மைந்த! ஆதி ...... குருநாதா!

திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து, சூரர்
     செரு அடங்க வேலை ...... விடுவோனே!

செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி
     திரு விரிஞ்சை மேவு ...... பெருமாளே.

Comments