Thiruppugazh #155 manai makkal

வள்ளிமணவாளரே!
தேவர் சிறை மீட்ட தேவ தேவரே!
மனைமக்கள் மீதுள்ள பற்றையறுத்து,
அவகதி செல்லாமல் சிவகதி பெற அருள்புரிவீர்
.


மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
வலையைக்க டக்க ...... அறியாதே

வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன்
விழலுக்கி றைத்து ...... விடலாமோ

சுனையைக்க லக்கி ...... விளையாடு
சொருபக்கு றத்தி ...... மணவாளா

தினநற்ச ரித்ர ...... முளதேவர்
சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே

Comments