Thiruppugazh #145 marukku laviya

மருக்கு லாவிய
(திருவிடைக்கழி)

முருகா!
சர்வ வல்லமை பொருந்தியவரே!
ஒளி மிக்க பச்சை நிற மயிலின் மீது வரும் வீரரே!
திருக்கையில் வேலை ஏந்திய, திருமேனி அழகரே!
அடியேனை ஆட்கொண்டு அருள் புரியவேணும்.


மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே

கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்

தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.

Comments