Thiruppugazh #139 maalayil vandhu

மாலையில் வந்து (இலஞ்சி)
முருகா!
நீ இன்று வந்து அருள வேண்டும்
.


மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை யநங்கன் ...... மலராலும்

வாடை யெழுந்து வாடை செறிந்து
வாடை யெறிந்த ...... அனலாலுங்

கோல மழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி ...... தளராமுன்

கூடிய கொங்கை நீடிய அன்பு
கூரவு மின்று ...... வரவேணும்

கால னடுங்க வேலது கொண்டு
கானில் நடந்த ...... முருகோனே

கான மடந்தை நாண மொழிந்து
காத லிரங்கு ...... குமரேசா

சோலை வளைந்து சாலி விளைந்து
சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே

சூரிய னஞ்ச வாரியில் வந்த
சூரனை வென்ற ...... பெருமாளே.

-----------------------------

Comments